Connect with us

Raj News Tamil

சிறையில் தலைமை காவலர் செய்த அட்டகாசம்.. அதிர்ச்சி வீடியோ..

தமிழகம்

சிறையில் தலைமை காவலர் செய்த அட்டகாசம்.. அதிர்ச்சி வீடியோ..

தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2002-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் ஜெயக்குமார்.

ஆரம்பத்தில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த இவர், தற்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையில், தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

சிறையில் கைதிகளை பார்க்க வரும் அவர்களது உறவினர்களிடம் ஜெயக்குமார் லஞ்சம் பெறுவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், மது அருந்திவிட்டு, சிறைக் கைதிகளை அவர் தொந்தரவு செய்வதாகவும், கூறப்பட்டது.

இந்நிலையில், தலைமை காவலர் ஜெயக்குமார், பணியில் இருக்கும்போதே மது அருந்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும், இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top