மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை!

சீர்காரி அருகே மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வள்ளுபடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் இளங்கோவன் (50). இவர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த இளங்கோவன் மனைவி மற்றும் மகளிடம் தகராறு செய்துள்ளார். இதனை அவரது மனைவி உமாமகேஸ்வரி கண்டித்துள்ளார்.

இதனால் மனம் உடைந்து வீட்டில் வாசலில் படுத்திருந்த இளங்கோவனை பின்னர் காணவில்லை இந்நிலையில் இன்று காலை சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் கேட் அருகே உள்ள மரத்தில் இளங்கோவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளங்கோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த இளங்கோவனுக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News