Connect with us

Raj News Tamil

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை!

தமிழகம்

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை!

தமிழகத்தில் நேற்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடாமல் கனமழை கொட்டி தீர்த்தது.

நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கே.கே. நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர், மாம்பலம், ஆழ்வார்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், கோடம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதேபோல புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

ஆனால் இந்த திடீர் மழை காரணமாக நகரின் ஒரு சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

More in தமிழகம்

To Top