வானிலை
பிபோர்ஜோய் புயல் : கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயலால் கேரளா முதல் மராட்டிய மாநிலம் வரை கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
பிபோர்ஜோய் புயல் காரணமாக கேரளாவில் 5 நாட்கள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login