Connect with us

Raj News Tamil

மீண்டும் தென்மாவட்டங்களை அச்சுறுத்தும் கனமழை..!

தமிழகம்

மீண்டும் தென்மாவட்டங்களை அச்சுறுத்தும் கனமழை..!

தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். அதேபோல் தென்காசி, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள், பாதுகாப்பாக இருக்கும்படி துாத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More in தமிழகம்

To Top