நேபாளத்தில் கனமழையால் நிலச்சரிவு : 14 பேர் பலி

நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேபாளத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News