ரூபாய் நோட்டுகளில் காந்திக்கு பதிலாக சாவர்க்கர் படம் – சர்ச்சையை கிளப்பும் இந்து மகா சபை

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர் சாவர்க்கர் படம் அச்சிட வேண்டும் என மத்திய அரசுக்கு இந்து மகாசபா கோரிக்கை விடுத்திருக்கிறது.

வீர் சாவர்க்கரின் 58-வது நினைவு தினம் நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் சாரதா சாலையில் உள்ள அகில பாரத இந்து மகாசபா அலுவலகத்தில் அணுசரிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து இந்து மகாசபா சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், “நாடாளுமன்ற வளாகத்திற்குச் செல்லும் சாலைக்கு சாவர்க்கரின் பெயரை மாற்ற வேண்டும். ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர் சவார்க்கர் மற்றும் இதர சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களை பொறிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News