போதும் போதும்.. நிறுத்துங்க…அமித்ஷாவை அலறவிட்ட செய்தியாளர்..!

புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த நாடாளுமன்றக் கட்டடத்தில் சோழர் காலத்து செங்கோலை மத்திய அரசு நிறுவவுள்ளது.

தமிழ் மன்னர்களின் அடையாளமாக கருதப்படும் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவுவது நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது ஒரு பிரபல தமிழ் நாளிதழின் நிருபர் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கேள்வியை ஆரம்பித்தார். அந்த நிருபர் பேசியதாவது : புதிய நாடாளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள செங்கோல் குறித்து நீங்கள் விரிவான விளக்கம் அளித்தீர்கள். இது சோழர் சாம்ராஜ்யத்துக்கு உரியது மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டை ஆண்ட சேரர், சோழர், பாண்டிய மன்னர்களும் செங்கோலை பயன்படுத்தி வந்துள்ளனர். இப்போது தென்னிந்திய மக்கள் அனைவருமே பாஜகவுக்கு தங்கள் கதவை அடைத்துவிட்டனரே..” என அவர் தனது கேள்வியை கேட்டார்.

இதையடுத்து பதில் சொல்ல முடியாமல் அமித்ஷா திணறினார். “போதும் போதும்.. நிறுத்துங்கள். அடுத்தவர் கேள்வி கேளுங்கள்” எனக் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News