ஆரோக்கியம்
முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? இந்த எண்ணெயை பயன்படுத்துங்க!
இன்றைய நவீன உலகத்தில், அனைத்து துறைகளிலும், பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதே அளவிற்கு, மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனைகளும், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக, இன்றைய இளைஞர்களுக்கு, முடி கொட்டுவது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக, பல இயற்கை வைத்தியங்கள் இருக்கிறது.
ஆனால், பெரும்பாலும், நவீன வைத்தியங்களில் மட்டுமே பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர். அதற்கு பதிலாக, நம் முன்னோர்களின் வீட்டு வைத்தியங்களை செய்தும், பயன் பெற முடியும். அவற்றை பின்வருமாறு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
தேங்காய் எண்ணெய் – பேராசூட், பெரிய நெல்லிக்காய் 3, செம்பருத்தி பூ, செம்பருத்தி மரத்து இலை கொழுந்து, கருஞ்சீரகம் , சின்ன வெங்காயம், வெந்தயம்
செய்யும் முறை:-
வானலியை அடுப்பின் மீது வைத்து, சிறிது நேரம் கழித்து தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து, கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை, எண்ணெயில் போட வேண்டும்.
சிறிது நேரம் கழித்து, சின்ன வெங்காயம் மற்றும் நெல்லிக்காயை இடித்து, போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அடுப்பை அனைத்துவிட வேண்டும். அதன்பிறகு, செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலையை அதில் போட வேண்டும்.
பிறகு ஒரு நாட்கள் அந்த கலவையை எண்ணெயிலேயே ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் இருந்து, அந்த எண்ணெயை, பாட்டிலில் சேகரித்து, தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், முடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, அடர்த்தி அதிகரிக்கும் மற்றும் முடி உதிர்வும் தடுக்கப்படும்.
ஆனால், முடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதால், அந்த காரணங்களை மருத்துவர்களின் உதவியுடன் அறிந்துக் கொண்டு, அதற்கு ஏற்றப்படியும் செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.