Connect with us

Raj News Tamil

விழுப்புரத்தில் வீட்டுமனை தகராறில் அண்ணன் மீது தீ வைத்த தம்பி கைது..!

தமிழகம்

விழுப்புரத்தில் வீட்டுமனை தகராறில் அண்ணன் மீது தீ வைத்த தம்பி கைது..!

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் வசித்து வரும் இளங்கோவன் மற்றும் அவரது உடன் பிறந்த தம்பி நந்தகோபாலுக்கும் சொந்தமான வீட்டுமனை விளந்தை கிராமத்தில் உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு இளங்கோவன் மட்டும் விளந்தை கிராமத்திற்குச் சென்று அந்த வீட்டுமனையில் கொட்டகை அமைத்து தங்கியுள்ளார். இந்த வீட்டுமனை சொத்தில் எனக்கும் உரிமை இருக்கும் போது என்னைக் கேட்காமல் நீ மட்டும் இங்கு வந்து கொட்டகை அமைத்து தங்கியது ஏன் என்று கேட்டுள்ளார். இதனால் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அண்ணனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு அவர் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் அலறிக் கூச்சலிட்ட இளங்கோவனை அருகிலிருந்தவர்கள் மீட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தகோபாலை கைது செய்தனர். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழகம்

To Top