தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யபட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலம் பலாசா-விசாகப்பட்டினம் மற்றும் ராயகடா-விஜயநகரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து வருகிற 3 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு வரும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்-12839) ரத்து செய்யப்படுகிறது.
மேலும் அதே தேதியில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு ஹவுரா புறப்பட்டு செல்லும் அதிவிரைவு ரயில் (12840) ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.