Connect with us

Raj News Tamil

சென்னையில் இருந்து புறப்படும் ஹவுரா அதிவிரைவு ரயில் ரத்து

தமிழகம்

சென்னையில் இருந்து புறப்படும் ஹவுரா அதிவிரைவு ரயில் ரத்து

தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யபட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலம் பலாசா-விசாகப்பட்டினம் மற்றும் ராயகடா-விஜயநகரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து வருகிற 3 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு வரும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்-12839) ரத்து செய்யப்படுகிறது.

மேலும் அதே தேதியில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு ஹவுரா புறப்பட்டு செல்லும் அதிவிரைவு ரயில் (12840) ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top