Connect with us

Raj News Tamil

காசு தரீயா இல்லையா..? – மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

இந்தியா

காசு தரீயா இல்லையா..? – மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

மும்பை அருகே, மது அருந்துவதற்கு பணம் தராத மனைவியை, கணவன் அடித்தே கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மல்வானி பகுதியை சேர்ந்தவர் அன்சாரி. மதுவுக்கு அடிமையான இவர், அடிக்கடி மது அருந்திவிட்டு, தனது மனைவியை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், கடந்த 7-ஆம் தேதி அன்று, மது குடிக்க பணம் வேண்டும் என்று கூறி, தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு முற்றிய நிலையில், தனது மனைவியை அன்சாரி கொடூரமாக தாக்கியுள்ளார்.

இவர்களது சண்டையை அறிந்த அக்கம் பக்கத்தினர், பர்வீனை காப்பாற்றுவதற்காக, வீட்டின் உள்ளே வந்தனர். அதற்குள், அன்சாரி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, வீட்டின் உள்ளே நுழைந்த அக்கம் பக்கத்தினர், பர்வீனை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய அன்சாரியை, கைது செய்தனர்.

மது அருந்துவதற்கு பணம் தராத மனைவியை, கணவன் அடித்தே கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top