தமிழகம்
காதல் திருமணம்.. 6 மாதங்களில் கொலை செய்த கணவன்.. கர்ப்பிணி பெண் பரிதாப பலி..
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். 31 வயதாகும் இவர், தனியார் முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, இவருக்கும், அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இருவரும் திருமணம் செய்துக் கொண்டு, தனியாக வீடு எடுத்து, வசித்து வந்தனர். இதற்கிடையே, ரம்யா கர்ப்பம் அடைந்துள்ளார். ஆரம்பத்தில் அமைதியாக சென்ற வாழ்க்கை, நாட்கள் செல்ல செல்ல சண்டையும், தகராறுமாக மாறியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினமும், தம்பதியினர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், தனது மனைவியை கட்டையால் அடித்து, கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சதீஷ் குமாரையும், அவரது தாய் மற்றும் தந்தையையும் கைது செய்தனர். கர்ப்பிணி பெண்ணை, காதல் கணவன் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login