Connect with us

Raj News Tamil

தற்கொலைக்கு முயன்ற கணவன்.. நலம் விசாரிக்க மருத்துவமனை வந்த மனைவி.. இறுதியில் நடந்த கொடூரம்..

தமிழகம்

தற்கொலைக்கு முயன்ற கணவன்.. நலம் விசாரிக்க மருத்துவமனை வந்த மனைவி.. இறுதியில் நடந்த கொடூரம்..

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஈச்சங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். இவர், தனது மனைவி பரணியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி அன்றும், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை முடிந்த பிறகு, அடுத்த நாள், தனது அலுவலக பணிக்கு, பரணி சென்றுள்ளார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சரத்குமார், பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

சிகிச்சை நடந்துக் கொண்டிருந்த சமயத்தில், தனது மனைவியை பார்க்க வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் சரத்குமார் கூறியுள்ளார். முதலில் கணவனை பார்ப்பதற்கு மறுப்பு தெரிவித்த பரணி, பின்னர் ஒத்துக் கொண்டுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தனது மனைவியின் கழுத்தில் சரத்குமார் வெட்டியுள்ளார்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த அந்த பெண்ணை, அங்கிருந்தவர்கள் காப்பாற்றினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சரத்குமாரை கைது செய்துள்ளனர். தற்போது, அவரது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே மீண்டும் சேர்த்துள்ளனர். நலம் விசாரிக்க சென்ற மனைவியின் கழுத்தை, கணவன் வெட்டியுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top