ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி!

நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது போட்டி நேற்று ஹைதராபாத் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.

இதில் நிதிஷ் ரெட்டி (76 ரன்கள்), ஹெட் (58 ரன்கள்) மற்றும் கிளாசன் (42 ரன்கள்) குவித்தனர். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் அணி. தொடக்கத்தில் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர்.

ஆனால், ஜெய்ஸ்வால் (67 ரன்கள்) மற்றும் ரியான் பராக் (77 ரன்கள்) நிலைத்து விளையாடி 134 ரன்ங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், புவனேஷ்வர் குமார் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஹைதராபாத்திற்கு வெற்றியை தேடி தந்தார்.

இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

RELATED ARTICLES

Recent News