Connect with us

Raj News Tamil

திடீரென வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி தந்த சந்தோஷ் நாராயணன்!

சினிமா

திடீரென வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி தந்த சந்தோஷ் நாராயணன்!

தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன்.

தமிழ் மட்டுமின்றி, மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைத்து வரும் இவர், தனது மகள் தீ, தெருக்குரல் அறிவு ஆகியோரை வைத்து, எஞ்சாய் எஞ்சாமி என்ற சுயதீன பாடலை, உருவாக்கியிருந்தார்.

பெரும் வரவேற்பை பெற்ற இந்த பாடல், 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த பாடல் தொடர்பாக பேசி, சந்தோஷ் நாராயணன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இப்பாடலின் மூலம், தனக்கு ஒரு பைசா கூட வருமானம் கிடைக்கவில்லை என்றும், இது பொது தளத்தில் சொல்ல வேண்டும் என விரும்பினேன். அதனால் சொல்லிவிட்டேன் என்றும் கூறியுள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More in சினிமா

To Top