திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தை.. ஓபனாக சொன்ன தமிழ் நடிகை!

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சத்திய சோதனை, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ரேஷ்மா. இவர் தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ரேஷ்மா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், என்னுடைய மகன் வயிற்றில் இருந்தபோது, என் கணவன் தாக்கிவிட்டார். இதனால், என் மகனுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

என் மகன் ராகுல் பிறந்து 9 மாதம் வரை, இன்குபேட்டரில் தான் இருந்தான். அதன்பிறகு, பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது சரியாகினான். அந்த ரிலேஷன்ஷிப்பிற்கு முன்பு, எனக்கு ஒரு மகன் பிறந்து இறந்துவிட்டான்.

அதேபோல், இந்த மகனும் இறந்துவிடுவான் என்று பயந்தேன். ஆனால், என்னுடைய மகன் ராகுல் உடல்நலம் சரியாகிவிட்டது என்று கூறியுள்ளார்.

திருமணத்திற்கு முன்பு, இன்னொரு மகன் பிறந்து இறந்துவிட்டான் என்று ரேஷ்மா கூறியிருப்பது, பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News