Connect with us

Raj News Tamil

ஆரூத்ரா மோசடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – ஆர்.கே சுரேஷ் பேட்டி

தமிழகம்

ஆரூத்ரா மோசடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – ஆர்.கே சுரேஷ் பேட்டி

சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிறுவனம் முதலீடு செய்த ஒரு லட்சம் முதலீட்டாளர்களை ஏமாற்றி 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மோசடியில் பாஜகவின் ஓபிசி பிரிவு துணைத் தலைவராக இருக்கும் நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜரான ஆர்.கே.சுரேஷிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடித்து வெளியே வந்த ஆர்.கே.சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ஆரூத்ரா நிறுவன முறைகேட்டிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன். நாளை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளார்கள்.

எதிர்பாராத விதமாக எனது மனைவிக்கு பிரசவமாகிவிட்டது. எனது குழந்தை கிட்டத்தட்ட 15 – 20 நாள் ஐசியூவில் இருந்தனர். அதனால் மாதாமாதம் சிகிச்சைக்காக செல்ல வேண்டி இருந்தது. அந்த சூழலினால் அங்கு இருக்க வேண்டி இருந்தது.

நீதிமன்றத்திலும் லுக் ஆப் நோட்டீஸ் வழக்கு தாமதமாகி வந்தது. அது கிடைத்ததனால் நானே வந்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.

More in தமிழகம்

To Top