Connect with us

Raj News Tamil

தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழகம்

தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்!

‘அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழு’, என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அவருடைய அணி சார்ந்த தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை எழுப்பூரில் நடைபெற்றது.

கூட்டத்தில், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகரன், வைத்திலிங்கம், புகழேந்தி, மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள், மகளிர் அணியினர் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை. தனிக்கட்சி தொடங்கினால் சட்ட சிக்கல் ஏற்படும் என்பதால் தான், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’, என்ற பெயரில் அமைப்பாக தற்காலிகமாக செயல்படுகிறோம். ஜன. 6-ல் கோவையில் நடைபெற இருந்த மாநாடு தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறது.

முதல் தர்மயுத்தம் ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற தொடங்கினோம். தற்போது, நாம் 2-வது தர்மயுத்தத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். கட்சி உடைந்துவிடும் என்பதால் தான், கட்சியில் இருந்து விலகாமல் பொறுமையாக இருந்தேன். இவ்வாறு அவர் பேசினார்.

More in தமிழகம்

To Top