Connect with us

Raj News Tamil

“செல்போனை உடைத்திடுவேன்” ரசிகர்களிடம் கடுப்பான நயந்தாரா..!

சினிமா

“செல்போனை உடைத்திடுவேன்” ரசிகர்களிடம் கடுப்பான நயந்தாரா..!

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன், நேற்று கும்பகோணம் அடுத்த மேலவழுத்தூர் ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றார். இதனை அறிந்த ரசிகர்கள், அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதன்பின் சென்னை திரும்புவதற்காக ரயில் ஏறியபோது, ரசிகை ஒருவர் அவர் மீது கைப்போட்டு புகைப்படம் எடுக்க முயற்சி செய்தார்.

இதனால் கோபமான நயந்தாரா போட்டோ எடுத்தவரை பார்த்து செல்போனை உடைத்துவிடுவேன் என்று முகம் சுளிக்க பேசினார். முன்னதாக சாமி தரிசனம் செய்தபோது ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சற்று கோபமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top