அரசியல்
நான் முதல்வரானால் மீனவர்கள் கையில் வெடிகுண்டை கொடுப்பேன் – சர்ச்சையில் சிக்கிய சீமான்
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீமான் பேசுகையில் நமது தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நான் மட்டும் தமிழக முதல்வராக பதவியேற்றால் மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது அவர்கள் கையில் வெடிகுண்டுகளை கொடுத்து அனுப்புவேன் என அவர் பேசியுள்ளார்.
சீமானின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சீமானின் பேச்சுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.