சினிமா
“150 வயசு வரை வாழணுமா.. என்னை முதலமைச்சர் ஆக்குங்கள்..” – மந்திரவாதி போல் பேசிய சரத்குமார்!
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில், சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம், நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கட்சியின் தலைவர் சரத்குமார், தொண்டர்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தனக்கு 69 வயதாகிறது. ஆனால், தற்போதும் 25 வயது இளைஞன் போல், சுறுசுறுப்பாக இருந்து வருகிறேன் என்று தெரிவித்தார்.
இன்னும் 150 வயது வரை வாழ்வேன் என்று கூறிய அவர், தன்னை முதலமைச்சர் ஆக்கினால், அதற்கான வித்தையை பொதுமக்களுக்கு கூறுவேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சரத்குமார், “மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான், அறிவு திறமை படைத்தவர்கள் அதிகமாக உள்ளனர். இருப்பினும், ஏன் இந்த தடுமாற்றம் என்று கேள்வி எழுப்பினார்.
You must be logged in to post a comment Login