Connect with us

Raj News Tamil

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்; 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்!

தமிழகம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்; 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்!

“ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 உத்தரவாதம் கொடுத்துள்ளார்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விவரித்துள்ளார்.

இது குறித்து காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியது: “ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 உத்தரவாதம் கொடுத்துள்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களில் உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பயிற்சி பெறுவோரை நியமித்துக் கொள்ளலாம் என்று சட்டம் உள்ளது. ‘படித்தவர்கள் தாங்கள் பயிற்சி பெறுவது எனது உரிமை’ என சட்டத்தை மாற்ற உள்ளோம். பயிற்சி பெறுவோருக்கு மாதம் ரூ.8 ஆயிரம் கிடைக்கும்.

தேர்வு வினாத்தாளை கசிய விடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலமாக தண்டனை பெற்று தரப்படும். ஆன்லைனில் ஆர்டர் பெற்று பொருட்களை விநியோகிக்கும் பணிகளில் பல லட்சம் பேர் உள்ளனர்.

அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க சட்டம் கொண்டு வரப்படும். புதிய தொழில் தொடங்குவோருக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க உள்ளோம். அதில் ஒரு தொகுதிக்கு ரூ.10 கோடி வழங்கப்படும்.

தற்போது வங்கிக் கடன் மேட்டுக்குடி மக்களுக்குத்தான் செல்கிறது. சாதாரண மக்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது. 42 சதவீத பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.

தேர்தல் நெருங்கும்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்துள்ளனர். தேர்தலுக்கு பின்னர் மீண்டும் விலையை உயர்த்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

21,000-க்கும் மேற்பட்ட தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதை யார் வாங்கினார்கள் என்பது பாரத ஸ்டேட் வங்கிக்கு தெரியும். அந்த விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் கேட்கின்றனர். உண்மையில் அவற்றை வெளியிட 24 மணி நேரமே போதும்.

காங்கிரஸுக்கு இந்த தேர்தல்தான் கடைசி என்று கூறி, அண்ணாமலை போன்று பல பேர் எங்கள் கட்சிக்கு கெடு விதித்துள்ளனர். ஆனால் 139 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி உயிரோட்டமாக இருந்து வருகிறது” என்றார் ப.சிதம்பரம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top