தமிழகம்
ஆண்கள் சட்டையை தீயிட்டு கொளுத்தினால் திருஷ்டி கழியும் ! செய்யாறில் பரவிய வதந்தி!
செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் இந்த முறை புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை சரியாக தெரியவில்லை ,எனவும் குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஆண் குழந்தைக்கு நோய் நொடி ஏற்படும் என்றும் வதந்திகள் பரவியுள்ளது .இதனால் ஆண்கள் சட்டையை தீயிட்டு கொளுத்தினால் திருஷ்டி கழிந்து விடும் என்று கூறியுள்ளனா்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆண் குழந்தைகள் அணிந்திருந்த துணிகளை வீட்டின் வாசல் முன்பு போட்டு நள்ளிரவில் தீயிட்டு கொளுத்தினர். ஒருவரை பார்த்து ஒருவர் என பல வீடுகளில் ஆண் குழந்தைகளின் துணிகள் எரிக்கப்பட்டன. மகாளய அமாவாசை சரியான நேரத்தில் வராததால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பழைய துணிகளை தீயிட்டுக் கொளுத்தி திருஷ்டி கழிக்கப்பட்ட சம்பவம் அவ்வுா் சுற்றுவட்டார மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.