Connect with us

Raj News Tamil

நாக்கை வெட்டுவோம்…கண்ணை நோண்டுவோம் – மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

இந்தியா

நாக்கை வெட்டுவோம்…கண்ணை நோண்டுவோம் – மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ‘சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்’ என்று பேசினார். அவருடைய இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து உத்தர பிரதேசத்தில் சாமியார் ஒருவர் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் சனாதனம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்க வேண்டும்; கண்ணை நோண்ட வேண்டும். சனாதனத்தை ஒழிப்பதாக பேசுபவர்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என்று கூறினார்.

மத்திய அமைச்சரே நாக்கை வெட்டுவோம்…கண்ணை நோண்டுவோம் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top