தமிழகம்
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கடன் வழங்கும் செயலிகள் நீக்கம் – சைபர் க்ரைம் அதிரடி
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து சட்டவிரோதமாக கடன் வழங்கும் 221 செயலிகளை நீக்கி, தமிழக சைபர் கிரைம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக போலி கடன் செயலியை உருவாக்கி மோசடி கும்பல் கடன் கொடுத்து வந்தது. கொடுத்த பணத்தை விட அதிக தொகையை கேட்டு வாடிக்கையாளர்களை மிரட்டி வந்தனர். இதனால் தமிழ்நாட்டில் தற்கொலை சம்பவங்களும் அதிகளவில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக சட்டவிரோதமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த 221 கடன் செயலிகளை கூகுள் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
You must be logged in to post a comment Login