செல்போனில் மூழ்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

கடந்த காலங்களில் பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் கபடி கோகோ கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி உடல் நலத்தை பேணி காத்து வந்தனர்.

ஆனால் தொழில்நுட்பங்கள் வளர மாணவர்கள் மற்றும் பிள்ளைகள் மைதானத்தில் சென்று விளையாடுவதை விட செல்போனை கையில் வைத்துக்கொண்டு பல்வேறு விளையாட்டுகளை விளையாடி காலத்தை கழித்து வருகின்றனர்.

இது அவர்களின் எதிர்காலத்திற்கும் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்பதை உணர்த்தும் வகையில் புதுச்சேரியில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அதில் 1980-ம் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கும் 2000-ம் ஆண்டு பிறந்தவர்களுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

புதுச்சேரி ஆரோவில் பல்மைரா மைதானத்தில் நடைபெற்ற 20/20 கிரிக்கெட் போட்டியில் திரளான வீரர்கள் பங்கேற்று விளையாடினார்கள்.

இது குறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சந்திரமௌலி கூறும் போது…

அப்போது எல்லாம் விளையாட்டு என்று இருந்த மாணவர்கள் தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் செல்போன் என்று மூழ்கி விட்டார்கள்.

மைதானத்தில் விளையாட வேண்டிய விளையாட்டுகளை செல்போனில் விளையாடுகின்றனர் இதனால் விளையாட்டு மைதானம் என்றாலே என்ன என்று தெரியாத அளவிற்கு தற்போது உள்ளார்கள்.

அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கிரிக்கெட் நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் 80-ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளுக்கும் 2000-ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி மிகவும் அருமையாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

Recent News