தமிழகம்
கணக்கில் வராத இரண்டாயிரம் கோடி…சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில், நாள்தோறும் 100 கணக்கான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று வருமான வரித்துறையினர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை சுமார் 20 மணி நேரங்களாக நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ. 2 ஆயிரம் கோடி கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
இதே போல திருச்சி மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 1000 கோடி ரூபாய் கணக்கில் வரவில்லை என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.