செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சென்னையில் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று 300 கனஅடியாக இருந்த நீர்வரத்து 577 கன அடியாக அதிகரித்துள்ளது.

3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 1441 மில்லியன் கனஅடியாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக மற்றும் பிற தேவைக்காக வினாடிக்கு 149 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஒரே நாள் இரவில் ஏரிக்கு 377 கன அடி நீர் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி சுற்றுப்பகுதியில் 80.04 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News