Connect with us

Raj News Tamil

உலகக் கோப்பை போட்டி – முதல் விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா!

விளையாட்டு

உலகக் கோப்பை போட்டி – முதல் விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், இன்று உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியா அணியும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இதில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இதனால், முதலில் சுப்மன் கில்லும், ரோஷித் சர்மாவும், தங்களது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்கள். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ரோஷித் சர்மா, சிக்ஸர், பவுண்டரிகள் அடித்து விளாசினார்.

ஆனால், சுப்மன் கில், வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தருவார்கள் என்று எதிர்பார்பத்த சுப்மன் கில், இவ்வாறு தனது விக்கெட்டை பறிக் கொடுத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in விளையாட்டு

To Top