இந்தியா
திருமண நாள் பரிசாக கணவன் கொடுத்த பணம்.. மனைவிக்கு அடித்த ஜாக்பாட்..
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்னெக் சிங். இவர் தனது 16-வது திருமண நாளை முன்னிட்டு, மனைவி பாயலுக்கு ஆயிரம் திர்ஹாம்-ஐ ( துபாய் நாட்டு பணம் ) கொடுத்துள்ளார்.
இந்த பணத்தை வைத்து, 3337 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டை, கடந்த மே 3-ஆம் தேதி அன்று, ஆன்லைனில் அவர் வாங்கியுள்ளார். இந்நிலையில், இந்த லாட்டரி குலுக்கலில், பாயலுக்கு 1 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.
இதன்மூலம், துபாய் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற 229-வது இந்தியராக பாயல் இடம்பிடித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் கடந்த 12 வருடங்களாக, லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறேன். பொதுவாக, பயணம் மேற்கொள்ளும் போது டிக்கெட் வாங்குவேன். சில சமயங்களில், என் கணவர், குழந்தைகளின் பெயர்களில் டிக்கெட் வாங்குவேன்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பொதுவாக நான் DDF லாட்டரி டிக்கெட்டை வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை, விமான நிலையத்தில் வாங்குவேன். ஆனால், கடந்த முறை, ஒரு மாறுதலுக்காக, ஆன்லைனில் டிக்கெட் வாங்கியிருந்தேன். இந்த முறை, திருமண நாளுக்காக கணவன் கொடுத்த பரிசாக கொடுத்த பணம், என்னை மில்லினியராக மாற்றியுள்ளது” என்று கூறினார்.
பரிசாக கிடைத்த பணத்தில், என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்று விவரித்த பாயல், குழந்தைகளின் கல்விக்காக அதிக பணத்தை செலவு செய்ய இருப்பதாக கூறினார். மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள தனது சகோதரனுக்கு உதவி செய்வதற்காகவும், தங்களது சமூகத்தை சேர்ந்த அறக்கட்டளைக்கு உதவி செய்வதற்காகவும், மீதமுள்ள பணத்தை செலவு செய்ய இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)