Connect with us

Raj News Tamil

செந்தில் பாலாஜிக்கு ரத்த குழாயில் அடைப்பு – மருத்துவமனையிலிருந்து வெளியான தகவல்

தமிழகம்

செந்தில் பாலாஜிக்கு ரத்த குழாயில் அடைப்பு – மருத்துவமனையிலிருந்து வெளியான தகவல்

தமிழகத்தின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்து வருபவர் செந்தில் பாலாஜி. இவரது வீட்டில், நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்காக, துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

சோதனை முடிந்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செயய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை அறிந்த திமுக அமைச்சர்கள் பலரும், மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து மருத்துவமனை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்திலுள்ள ரத்த குழாயில் அடைப்பு இருப்பதாக மருத்துவமனை உறுதி செய்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top