‘சிக்கன் ரைஸ் உணவில் பூச்சி மருந்து’..வெளியான அதிர்ச்சி தகவல்

நாமக்கல் கொசவம்பட்டி வ.உ.சி நகரை சேர்ந்தவர் பகவதி (20). இவர் நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள கருணாநிதி ஹோட்டலில் 6 சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த சிக்கன் ரைஸை, பகவதியின் தாய் நித்யா மற்றும் அவரது தாத்தா சண்முகம் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர். உணவருந்திய சிறிது நேரத்திலேயே இருவருக்கும் கடும் வயிற்று போக்கு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறையினர் அந்த உணவகத்தை ஆய்வு செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில் சிக்கன் ரைஸ் உணவில் பூச்சி மருந்து கலந்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவலால் சிக்கன் ரைஸ் உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News