Connect with us

Raj News Tamil

ஜாதிவெறி, மதவெறி தாக்குதல்களை தடுக்க நுண்ணறிவுப் பிரிவு உருவாக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்!

தமிழகம்

ஜாதிவெறி, மதவெறி தாக்குதல்களை தடுக்க நுண்ணறிவுப் பிரிவு உருவாக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்!

ஜாதிவெறி, மதவெறி தாக்குதல்களை தடுக்க தனி நுண்ணறிவுப் பிரிவு ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தைச் சோ்ந்த இளம்பெண் சந்தியா கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு தலைக்காதலை சந்தியா ஏற்காததால் விரக்தியடைந்த ராஜேஷ் கண்ணன் ஆத்திரப்பட்டு சந்தியாவை அவா் வேலை பார்த்து வந்த கடையில் வைத்தே வெட்டிப் படுகொலை செய்துள்ளதாக தெரிகிறது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவா் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவா் மீதான வழக்கை விரைந்து நடத்தி உரிய தண்டனை கிடைக்க ஆவன செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சந்தியா குடும்பத்தினருக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அரசு வழங்க வேண்டிய நிவாரணத் தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசுப் பணி ஆகியவற்றை வழங்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் தொடரும் ஜாதியப் படுகொலைகளையும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளையும், மாணவா்களுக்கு இடையே ஏற்படும் சாதிய மோதல்களையும் தடுத்து நிறுத்திடும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், ஜாதிவெறி, மதவெறி தாக்குதல்களை தடுக்க தனி நுண்ணறிவுப் பிரிவு ஒன்றை தமிழக அரசு உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் தொல்.திருமாவளவன்.

More in தமிழகம்

To Top