Connect with us

Raj News Tamil

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது..!

தமிழகம்

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது..!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆண்டுதோறும் வெப்பக்காற்று பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் 9வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா இன்று தொடங்கியது.

இந்த திருவிழாவின் போது வெவ்வேறு நாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் வரவழைக்கப்படும். இந்த பலூன்களில் சுற்றுலாப் பயணிகளும் பயணம் செய்யலாம். இந்த பலூன் திருவிழாவானது இந்தியாவிலேயே கோவை பொள்ளாச்சியில் மட்டும் தான் நடத்தப்படுகிறது.

வரும் 16-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் பலூன்கள் வானில் பறக்க விடப்படும். இதில் பிரான்ஸ், ஜெர்மனி, வியட்நாம், நெதர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 10 பலூன்கள் வரவழைக்கப்பட்டு வானில் பறக்கவிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த திருவிழாவைக் காண கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in தமிழகம்

To Top