Connect with us

Raj News Tamil

முதலீட்டாளர் மாநாடு 2024: தமிழ்நாடு ஈர்த்த முதலீடுகள் என்னென்ன?

தமிழகம்

முதலீட்டாளர் மாநாடு 2024: தமிழ்நாடு ஈர்த்த முதலீடுகள் என்னென்ன?

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 2 நாள்கள் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கிவைத்தார். இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்துக்கான ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும், தொழிலை விரிவுபடுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்கள் விவரங்கள் வருமாறு:

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரியில் உள்ள தங்கள் எலக்ட்ரானிக் உற்பத்தி ஆலையை 12 ஆயிரத்து 82 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்கிறது. இதன் மூலம் 40 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதலாக 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

காஞ்சிபுரத்தில் ஐசிஇ மற்றும் மின்சார கார்கள், பேட்டரி தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

அமெரிக்காவின் பஸ்ட் சோலார் நிறுவனம் 56 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

கோத்ரேஜ் நிறுவனம் 515 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

பெகட்ரான் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செங்கல்பட்டில் உள்ள தங்கள் உற்பத்தி ஆலையை 1 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விரிவாக்கம் செய்கிறது. இதன் மூலம் 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. இதன் மூலம் 3 ஆயிரத்து 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டிலேயே உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள தனது உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யும் விதமாக ஜேஎஸ்டபுள்யூ நிறுவனம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் டிவிஎஸ் நிறுவனம் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Continue Reading

More in தமிழகம்

To Top