இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் அடுத்து ஆண்டு மார்ச் 14-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் இன்றும் (24-ம் தேதி), நாளையும் (25-ம் தேதி) சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கவுள்ளன.
மேலும், இந்த ஏலத்துக்காக 1,574 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இதில் 574 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 366 பேர் இந்திய வீரர்கள், 208 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.
ஒவ்வொரு அணியும் ஏலத்துக்காக ரூ.120 கோடி செலவு செய்யலாம். இதில் அனைத்து அணிகளும் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக கணிசமான தொகையை ஏற்கெனவே பயன்படுத்திவிட்டன.
அணிகள் கையிருப்பு வைத்துள்ள தொகை விவரம்:
சென்னை – ரூ. 55 கோடி
டெல்லி – ரூ. 73 கோடி
குஜராத் – ரூ. 69 கோடி
கொல்கத்தா – ரூ 51 கோடி
லக்னோ – ரூ. 69 கோடி
மும்பை – ரூ. 45 கோடி
பஞ்சாப் – ரூ. 110.5 கோடி
ராஜஸ்தான் – ரூ. 41 கோடி
பெங்களூரு – ரூ. 83 கோடி
ஐதராபாத் – ரூ. 45 கோடி