Connect with us

Raj News Tamil

ஐஆர்சிடிசி இணையதளம் முடக்கம்: ரயில் நிலையங்களில் கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு!

இந்தியா

ஐஆர்சிடிசி இணையதளம் முடக்கம்: ரயில் நிலையங்களில் கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு!

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதை தொடர்ந்து இந்திய ரயில்வே இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

ரயில்வே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய பயணிகள் ஐஆர்சிடிசி என்ற செயலியை பயன்படுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த செயலியை பயன்படுத்தி முன் பதிவு செய்து வருகிறார்கள்.

ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர். இணையதளம் மற்றும் செயலியில் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த முடக்கம் நிகழ்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து, பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்ய Ask Disha என்ற செயலியை பயன்படுத்துமாறு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக, ரெயில் நிலையங்களில் கூடுதல் முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதை தொடர்ந்து இந்திய ரயில்வே இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top