Connect with us

Raj News Tamil

இவ்வளவு விலையா? அதிர்ச்சி அடைந்த விமானங்களில் செல்வோர்!

தமிழகம்

இவ்வளவு விலையா? அதிர்ச்சி அடைந்த விமானங்களில் செல்வோர்!

தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் விமானங்களில் டிக்கெட்டுகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 15 வரை தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதனால் அரசு தரப்பில் சிறப்புப் பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூக்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு வழக்கமாக ரூ.3,000-க்கு விமான டிக்கெட் விற்பனை செய்யப்படும். ஆனால் தொடர்ந்து 4 நாள் விடுமுறை என்பதால் ரூ.10,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

விமானங்களில் செல்வோர் டிக்கெட் விலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More in தமிழகம்

To Top