சினிமா
இது கேப்டன் மில்லா் இரண்டாம் பாகமா ? ஷாக்கிங் அப்டேட் கொடுத்த அருண்மாதேஸ்வரன்!
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் எதிா்பாா்ப்பு நாளுக்கு நாள் அதிகாித்து கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ மூன்று பாகங்களாக உருவாகவுள்ளதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,’கேப்டன் மில்லர்’ படத்தின் சீக்குவல் மற்றும் பிரீக்குவல் கதைகள் இருக்கின்றன. இப்போது வெளியாகும் பாகம் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த பாகத்தை தொடரலாம். தனுஷிடம் கதை சொல்லும் போதே பிரீக்குவலுடன் சேர்த்து தான் கூறினேன். ஆனால், அது இன்னும் பெரிய பட்ஜெட் என்பதால் தான் இரண்டாம் பாகத்தை எடுத்தோம் என்று கூறினார்.