பிரதமர் தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்திருந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில், நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் அனுமதித்தார்கள் பேசும்போதே எனது மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்.
மம்தா பானர்ஜியின் வெளிநடப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது? ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். கூட்டாட்சியில், அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்,” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.