தமிழகம்
விஜயகாந்த் இறப்புக்கு பில்லி சூனியம் தான் காரணமா ..? பகீா் கிளப்பும் கங்கை அமரன் .!
நேற்று விஜயகாந்த் இறந்ததை தொடர்ந்து, இன்று வரை பொதுமக்கள் மற்றும் திரைபிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இன்று மாலை இவா் அடக்கம் செய்யப்படுவாா் , என தொிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இவாின் இறப்புக்கு பலரும்
தங்களின் கருத்துகளை கூறிவரும் நிலையில், இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் இவரின் இறப்புக்கு சில மாந்திரீகங்கள்
தான் காரணம் என்று மனம் திறந்துள்ளாா்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கங்கை அமரன் . இது குறித்து கூறியுள்ளதாவது, “விஜயகாந்துக்கு அமெரிக்கா உட்பட உலகின் தலைசிறந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அவர் பழைய தெம்புடன் குணமடையாமல் போனது ஏமாற்றத்தை அளித்தது. ஆன்மிகத்தின் மூலம் விஜயகாந்துக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைச் சரி செய்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
விஜயகாந்துக்கு இறக்கும் வயதே இல்லை. இன்னும் எவ்வளவோ காலம் அவர் இருந்திருக்க வேண்டியவர் என்பதையும் நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது.நானும், அண்ணன் இளையராஜாவும் விஜயகாந்த் படங்களுக்கு மிக அதிகமாக இசையமைத்து கொடுத்துள்ளோம். மேலும், விஜயகாந்தை வைத்து 2 படங்கள் இயக்கியுள்ளேன்” என்று கூறினார்.மேலும், ” கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்தை தன்னால் பார்க்கமுடியவில்லை என்றும் பார்த்திருந்தால் ஆன்மிகவாதிகள் மூலம் உடல்நலத்தை சரி செய்ய அறிவுறுத்தியிருப்பேன்,என்று கூறியுள்ளாா். இவாின் இக்கருத்திற்கு அரசியல் வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.