Connect with us

Raj News Tamil

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பலி!

உலகம்

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் பலி!

அக்.7-ஆம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமார் 230 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் காசாவில் இதுவரை 8 ஆயிரத்து 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆயிரத்து 320 குழந்தைகள் ஆவர். 20,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

More in உலகம்

To Top