சினிமா
உருவாகிறது ஜெயிலர் 2..! – உண்மை சொன்ன நெல்சன்!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா, ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அதாவது சமீபத்தில், இயக்குனர் நெல்சனுடன் பேசியதாகவும், அப்போது அவர் ஜெயிலர் 2 படத்திற்கான கதையை எழுதி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே சொல்லப்பட்ட நிலையில் அந்தத் தகவல் உண்மைதான் என தற்போது தெரிய வந்துள்ளது.