Connect with us

Raj News Tamil

நாளை தொடங்குகிறது ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு..!

தமிழகம்

நாளை தொடங்குகிறது ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு..!

பொங்கல் பண்டிகையன்று வருடந்தோரும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை.

இந்நிலையில் நடப்பாண்டில் நடைபெறும் போட்டிகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேடு பகுதியிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து, ஜனவரி 17-ம் தேதி நடைபெறும் போட்டியை முன்னிட்டு, அதற்கான முகூர்த்தக்கால் நேற்று நடப்பட்டது.

இந்நிலையில், வரும் ஜனவரி 10 மற்றும் 11-ம் தேதிகளில் madurai.nic.in என்ற இணையதளத்தில் போட்டியில் கலந்துகொள்ளும் காளை உரிமையாளர்கள் மற்றும் மாடு பிடி வீரர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top