Connect with us

Raj News Tamil

“என்னையும் கொஞ்சம் பாராட்டுங்க” – ஜெயம் ராஜாவின் கலகல பதிவு!

சினிமா

“என்னையும் கொஞ்சம் பாராட்டுங்க” – ஜெயம் ராஜாவின் கலகல பதிவு!

ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர் நடிப்பில், கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படம் வெளியாகி 8 வருடங்களுக்கு பிறகு, நெட்டிசன் ஒருவர் இப்படம் தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “சித்தார்த்துக்கு வாய்ப்பு கிடைத்த போதே, மித்ரனை கொலை செய்திருக்கலாம். ஆனால், சித்தார்த் அப்படி செய்யவில்லை. ஏனென்றால், மித்ரனை எதிரியாக பார்த்த சித்தார்த், அவனது புத்திசாலித்தனத்துடன் போட்டி போட முயற்சி செய்தார்.

எனவே அவர் மித்ரனுடன் விளையாட ஆரம்பித்தார். இறுதியில், மெமரி கார்டை மித்ரனிடம் கொடுக்காமலே சித்தார்த் இறப்பதற்கு முடிவு செய்திருக்கலாம் மற்றும் மித்ரனின் மிஸனை தடுத்திருக்கலாம்.

ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. ஏனென்றால், தனக்கும், மித்ரனுக்கும் இடையிலான போட்டியில், அவன் ஜெயித்துவிட்டான் என்பதை ஒத்துக் கொண்டார்.

அதனால், அந்த வெற்றிக்கு பரிசாக மெமரி கார்ட்டை கொடுத்துவிட்டார். தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் கதாபாத்திரம் சித்தார்த் அபிமன்யு” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவுக்கு பதில் அளித்த ஜெயம் ராஜா, மித்ரனுக்கு மட்டும் பரிசு கிடையாது. புரிதல் சிறப்பாக இருக்கும் போது அது அதை எழுதியவர்களுக்கும் தான் பரிசு” என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top