Connect with us

Raj News Tamil

ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட ஜெயம் ரவி..!! என்ன நடந்தது?

சினிமா

ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட ஜெயம் ரவி..!! என்ன நடந்தது?

ஜெயம் ரவி நடிப்பில் சைரன் படம் தற்போது திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. சைரன் படம் வெளியான முதல் நாளில் மதுரைக்கு சென்ற ஜெயம் ரவி ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துள்ளார்.

அப்போது அந்த தியேட்டர் முன்பு கூடிய ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள முடியாத ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில், உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆனால் முடியவில்லை. உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுடன் மட்டும் செல்பி எடுத்து விட்டு, என்னைப் போன்றவர்களை அனுப்பி விட்டீர்கள். இது எனக்கு மோசமான நாள். உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

அதற்கு ஜெயம் ரவிக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛மன்னித்து விடுங்கள் பிரதர். அன்றைய தினம் கிட்டதட்ட 300 பேருடன் செல்பி எடுத்துக் கொண்டேன். உங்களுடன் எடுப்பதை எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை. சென்னைக்கு வாருங்கள் கண்டிப்பாக செல்பி எடுத்துக் கொள்வோம். வெறுப்பு வேண்டாம், அன்பை பரப்புங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top