“வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு படுத்தாதீங்க” – ஜெயம் ரவி ஆதங்கம்!

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஆனால், இவரது இந்த முடிவு, எனக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவு என்று, ஆர்த்தி கூறியிருந்தார்.

இதனால், இணையத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில், ஆர்த்திக்கு அதிக ஆதரவு எழுந்திருந்தது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி, இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “இருவீட்டை சேர்ந்தவர்களும், நிறைய பேசினோம். அதன் பிறகு எடுக்கப்பட்ட முடிவு தான் இது. ஆனால், இத்தனை நடந்த பிறகும், இதுகுறித்து தனக்கு தெரியாது என்று ஆர்த்தி கூறுவது, அதிர்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், பல வருட சினிமா வாழ்க்கையில், எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காத நடிகன் நான் என்றும், என்னை இன்னொரு பெண்ணுடன் தொடர்புப்படுத்துவது தவறான விஷயம் என்றும் அவர் கூறினார்.

நடிகர் ஜெயம் ரவியின் இந்த முடிவுக்கு, பிரபல பாடகி ஒருவர் தான் காரணம் என்று, இணையத்தில் தகவல் பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News