Connect with us

Raj News Tamil

தசாவதாரம் பட நடிகைக்கு 6 மாதம் சிறை தண்டனை!

சினிமா

தசாவதாரம் பட நடிகைக்கு 6 மாதம் சிறை தண்டனை!

மன்மத லீலை, சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும், தசாவதாரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா.

நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த இவர், சென்னையில் திரையரங்கம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ESI தொகையை பிடித்துள்ளார்.

ஆனால், அந்த பணத்தை அரசு காப்பீட்டு கழகத்தில் அவர் செலுத்தவில்லை என்று ஊழியர்கள் புகார் அளித்தனர்.

இந்த புகார் நீதிமன்றத்தில் பல்வேறு ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில், ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top