சினிமா
9 நாட்களில் வசூல் சாதனை படைத்த ஜிகர்தண்டா 2!
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, ஜகமே தந்திரம், பேட்ட, மகான் ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.
இவர் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஆரம்பத்தில் இருந்தே நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், ரசிகர்களிடமும், நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இப்படம் வெளியாகி, 9 நாட்களில், ரூபாய் 50 கோடியை வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில், படத்தின் வசூல், அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://rajnewstamil.com/wp-content/uploads/2022/08/raj-tamil-news-logo.png)